உரி பகுதியில் சதி திட்டத்துடன் நுழைய முயன்ற தீவிரவாதிகள் விரட்டியடிப்பு

ஜம்மு-காஷ்மீரின் உரி பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் ஆதரவு பெற்ற தீவிரவாத குழுக்களின் ஊடுருவல் முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.

இந்தியாவின் 73 வது சுதந்திர தினம் இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதற்காக நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீரின் உரி பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் ஆதரவு பெற்ற தீவிரவாதிகள் நேற்றிரவு ஊடுருவ முயன்றனர். அவர்களை இந்திய ராணுவம் விரட்டியடித்தது. தீவிரவாதிகளுக்கு ஆதரவாக பாகிஸ்தான் ராணுவமும் தங்களது நிலைகளில் இருந்து கொண்டு இந்தியாவை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியது. இந்நிலையில், இந்திய ராணுவம் வெளியிட்டுள்ள செய்தியில், காஷ்மீரில் வன்முறையை ஏற்படுத்த தீவிரவாத குழுக்களை ஊடுருவச் செய்ய பாகிஸ்தான் முயற்சி மேற்கொண்டது. அவர்களின் அச்சுறுத்தலை சமாளிக்க இந்திய ராணுவம் தயார் நிலையில் உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version