புயல் பாதித்த மாவட்டங்களில் மீண்டும் மின் கட்டணம் செலுத்த கால நீட்டிப்பு

புயல் பாதித்த மாவட்டங்களில் மீண்டும் மின் கட்டணம் செலுத்த கால நீட்டிப்பு

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் மின் நுகர்வோர்களில் நவம்பர் 15 ஆம் தேதி முதல் 25 ஆம் தேதி வரை மின் கட்டணம் செலுத்த வேண்டிய நுகர்வோர்கள் அபாரதமின்றி இம்மாதம் 30 ஆம் தேதி வரை மின் கட்டணம் செலுத்தலாம் என்று மின்வாரியம் ஏற்கனவே அறிவித்து இருந்தது.

இந்நிலையில் திருவாரூர்,திருச்சி மெட்ரோ (மணப்பாறை மற்றும் திருச்சி கிழக்கு இரண்டு கோட்டங்கள் மட்டும்), புதுக்கோட்டை,நாகப்பட்டினம் (கோட்டம் மட்டும்) ஆகிய மாவட்டங்களில் தொடர்ந்து சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருவதால் தாழ்வழுத்த மின்சாரம் பயன்படுத்தும் மின்நுகர்வோர்கள் மட்டும் அபராதமின்றி டிசம்பர் 5 ஆம் தேதி வரை மின் கட்டணம் செலுத்த கால அவகாசம் நீட்டிக்கப்படுவதாக தமிழக மின்வாரியம் அறிவித்துள்ளது

Exit mobile version