ஈரோடு வனப்பகுதிகளில் தற்காலிக தண்ணீர் தொட்டி அமைக்கும் பணிகள் தீவிரம்

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட தாளவாடி வனப்பகுதிகளில் தற்காலிக தண்ணீர் தொட்டி அமைக்கும் பணிகளில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட ஆசனூர், தாளவாடி போன்ற வனச்சரகங்களில் கடுமையான வறட்சி நிலவுகிறது. இப்பகுதிகளில் செடிகள், மரங்கள் காயந்து இருப்பதாலும், வனப்பகுதிகளில் உள்ள குட்டைகளில் நீர் இல்லாத காரணத்தாலும் யானைகள், காட்டெருமை போன்ற வனவிலங்குகள் கிராமங்களில் புகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதனால் தாளவாடி வனச்சரகம் சார்பில் தற்காலிக தண்ணீர் தொட்டி அமைக்கும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். மேலும் கட்டி முடிக்கப்பட்ட தண்ணீர் தொட்டிகளுக்கு லாரிகள் மூலம் தண்ணீர் உடனுக்குடன் நிரப்பப்படுகிறது. இவ்வாறு அமைக்கப்படும் தண்ணீர் தொட்டிகளால் வனவிலங்குகள் ஊருக்குள் புகுவது குறையும் என்று வனத்துறை அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Exit mobile version