கேரள செல்லும் வாகனங்கள், 10 டன்னுக்கு மேல் பாரம் ஏற்றிச் செல்ல தற்காலிக தடை

செங்கோட்டை வழியாக கேரளாவுக்குச் செல்லும் வாகனங்கள், 10 டன்னுக்கு மேல் பாரம் ஏற்றி செல்ல தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.

தமிழக – கேரள எல்லையான, நெல்லை மாவட்டம் செங்கோட்டை – புளியரைப்பகுதி வழியாக, தமிழகத்தில் இருந்து ஆயிரக்கணக்கான சரக்கு வாகனங்கள், தினசரி அத்தியாவசியப் பொருட்களுடன் பயணிக்கின்றன.

இந்நிலையில், கடந்த சிலமாதங்களுக்கு முன்னர், கேரளாவின் தென்மலை கல்லடா ஆற்றில் 13 கண் பாலம் அருகே, சாலையில் நிலச்சரிவு ஏற்பட்டது.

இந்த சாலையை சீரமைக்கும் பணி, மீண்டும் துவங்கியுள்ளது. இதையொட்டி, செங்கோட்டையிலிருந்து கேரளா செல்லும் வாகனங்கள், 10 டன்னுக்கு மேல் பாரம் ஏற்றி செல்ல தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது. இரு மாநில எல்லைகளிலும் அதிக பாரம் ஏற்றிச் செல்லும் வாகனங்கள் சோதனைச்சாவடிகளில் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன.

Exit mobile version