'மிஸ் இந்தியா 2020' பட்டம் வென்ற தெலங்கானா அழகி மானசா

தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தை சேர்ந்த மானசா, மிஸ் இந்தியாவாக தேர்வாகி உள்ளார்.

இந்திய அழகிப் போட்டியின் இறுதி சுற்று மும்பையில் நடைபெற்றது. இதில் இந்திய அழகியாக ஐதராபாத்தை சேர்ந்த பொறியியல் பட்டதாரியான மானசா வாரணாசி தேர்வு செய்யப்பட்டு அவருக்கு கிரீடம் சூட்டப்பட்டது.

23 வயது பொறியியல் பட்டதாரியான இவர், கல்லூரி காலம் முதலே மாடலிங்கில் ஈடுபாடு கொண்டுள்ளார். இந்த வெற்றியின் மூலம் வருகிற டிசம்பர் மாதம் நடைபெற உள்ள உலக அழகி போட்டியில் இந்தியா சார்பில் மானசா வாரணாசி பங்கேற்க உள்ளார். இதனிடையே, இந்த போட்டியில் இரண்டாவது இடத்தை உத்தர பிரதேச மாநிலத்தை சேர்ந்த ரிக்சா ஓட்டுநரின் மகளான மன்யாசிங் பெற்றார்.

 

Exit mobile version