2019 முதல் ஆசிரியர்கள் பணியிட மாறுதல் கலந்தாய்வு ஆன்லைன் மூலம் நடத்தப்படும்- பள்ளி கல்வித்துறை இயக்ககம்

வரும் கல்வியாண்டு முதல் ஆசிரியர்கள் பணியிட மாறுதல் கலந்தாய்வு ஆன்லைன் மூலம் நடத்தப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை இயக்ககம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக பள்ளிக்கல்வித் துறை இயக்ககம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தற்போது நடைமுறையில் உள்ள சிக்கல்களை தவிர்ப்பதற்காக வரும் கல்வியாண்டில் இருந்து ஆசிரியர்கள் பணியிட மாறுதல் கலந்தாய்வு, ஆன்லைன் முறையில் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்பு அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளதாகவும், ஆசிரியர் பணியிட மாறுதலில் வெளிப்படத்தன்மை இருக்க வேண்டும் என்பதற்காக கணினி வழி கலந்தாய்வு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version