சாத்தூர் அருகே பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு – ஆசிரியர் கைது

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே உள்ள ஊராட்சி ஒன்றிய பள்ளியில் பயிலும் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு செய்த ஆசிரியர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

சாத்தூர் அருகே மேலஒட்டம்பட்டி கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 24 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்தநிலையில், இப்பள்ளியில் பணியாற்றும், ஆசிரியர் கணேச பெருமாள் என்பவர் பள்ளிக்கு தினந்தோறும் குடிபோதையில், வருவதாகவும், மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு தருவதாகவும் கூறப்படுகிறது.

இதனை தொடர்ந்து மாணர்களின் பெற்றோர்கள் சாத்தூர் மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் ஆசிரியர் கணேச பெருமாள் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

Exit mobile version