பாலியல் வன்கொடுமை செய்த டீச்சர் அரெஸ்ட் !

எருக்கஞ்சேரி மெயின் ரோடு பகுதியில் இயங்கி வரும் தனியார் உயர்நிலைப்பள்ளியில் மாதவரம் பச்சையப்பன்கார்டன் தெருவைச் சேர்ந்த பிரேம் ஆனந்த் என்கிற ஆசிரியர் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் அதே பள்ளியில் படிக்கும் மாணவிகள் இருவர் ஆசிரியரின் வீட்டிற்கு சென்று டியூஷன் படித்து வந்துள்ளனர். அப்போது ஆசிரியர் மாணவிகள் இருவருக்கும் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதையடுத்து மாணவிகளின் பெற்றோர்கள் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் ஆசிரியரை கைது செய்தனர்.

Exit mobile version