கர்நாடக அமைச்சரின் செயலால் தமிழர்கள் கொந்தளிப்பு

மேகேதாட்டுவில் அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்றியுள்ள நிலையில், அணை கட்ட உள்ள இடத்தில் கர்நாடக அமைச்சர் சிவக்குமார் நேரில் ஆய்வு செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காவரி ஆற்றின் குறுக்கே மேகேதாட்டுவில் அணை கட்ட, கர்நாடக அரசுக்கு மத்திய அரசு அனுமதியளித்துள்ளது. இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது. இதனிடையே நேற்று தமிழக சட்டப் பேரவை சிறப்புக் கூட்டம் கூடி, மேகேதாட்டு அணைக்கு எதிராக ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்நிலையில், மேகேதாட்டுவில் அணை கட்ட உள்ள இடத்தில், பொதுப்பணித்துறை மற்றும் வனத்துறை வல்லுநர் குழுவுடன் கர்நாடக நீர்வள அமைச்சர் சிவக்குமார் ஆய்வு செய்யும் பணியில் ஈடுபட்டார். இது தமிழர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

Exit mobile version