தேசிய அளவிலான கராத்தே போட்டியில் தமிழகம் முதலிடம்

பொள்ளாச்சியில் தேசிய அளவில் நடைபெற்ற கராத்தே போட்டியில் தமிழக மாணவர்கள் முதல் இடத்தை பிடித்து சாதனை படைத்தனர்.

தேசிய அளவிலான பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கிடையே கராத்தே போட்டி பொள்ளாச்சியில் நடைபெற்றது. இந்த போட்டியில் தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, கேரளா, புதுச்சேரி, பீகார், உத்திர பிரதேசம், டெல்லி மற்றும் ஹரியானா ஆகிய மாநிலங்களில் இருந்து 350க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டனர். கட்டா என்ற தனிநபர் தற்பாதுப்பு மற்றும் குமிட்டே என்ற இரு நபர் சண்டை என்ற வகையில் நடைபெற்றது.இப்போட்டியில் அதிகளவில் தமிழக மாணவர்கள் வெற்றி பெற்று முதல் இரண்டு இடத்தை பிடித்தனர். மூன்றாம் இடத்தை ஆந்திரா மாநிலத்தை சேர்ந்த மாணவர்கள் தட்டி சென்றனர். போட்டியின் முடிவில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழும் பரிசுகளும் வழங்கபட்டது.

Exit mobile version