குடியரசுத் தினத்தையொட்டி ஆளுநர் ஆர்.என்.ரவி தேசியக்கொடியை ஏற்றி வைத்தார்!

இந்தியாவின் 74வது குடியரசுதினத்தினை முன்னிட்டு சென்னை மெரினாவில் உள்ள உழைப்பாளர் சிலை அருகே தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தேசியக்கொடியை ஏற்றி வைத்தார். அப்போது ஹெலிகாப்டர் மூலம் மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது.  இதனைத் தொடர்ந்து ஆளுநர் ஆர்.என். ரவி முப்படைகளின் மரியாதையையும் அணிவகுப்பினையும் ஏற்றார். மேலும் தமிழர் பண்பாட்டு நாகரீகத்தை வெளிப்படுத்தும் பொருட்டு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. கல்லூரி, பள்ளி மாணவ மாணவிகள் இந்த கலை நிகழ்ச்சிகளில் பங்கெடுத்து தங்களது திறமையினை வெளிப்படுத்தினர். ஒயிலாட்டம், மயிலாட்டம், கரகாட்டம் போன்ற பாரம்பரிய கலைகளானது அரங்கேறியது. பிறகு இதனைத் தொடர்ந்து அயல் மாநிலங்களின் கலாச்சரா நடனங்கள் நிகழ்த்திக் காட்டப்பட்டன. YouTube video player

Exit mobile version