ஆளுநர் ஆர்.என்.ரவியை அதிமுக ஒருங்கிணைப்பாளர் "மரியாதை நிமித்தமான சந்திப்பு"

தமிழ்நாடு ஆளுநரை, அண்ணா திமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார்.

தமிழ்நாடு ஆளுநராக ஆர்.என்.ரவி பொறுப்பேற்ற பின், ஆளுநர் மாளிகையில் முதல்முறையாக அவரை அண்ணா திமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் சந்தித்து பேசினார்.

இந்த சந்திப்பு சுமார் 30 நிமிடங்கள் நீடித்தது. சந்திப்பு முடிந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், மரியாதை நிமித்தமாக ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து பேசியதாக தெரிவித்தார். இந்த சந்திப்பின் போது அதிமுக அமைப்பு செயலாளர் ஜே.சி.டி.பிரபாகர் உடனிருந்தார்.

 

Exit mobile version