ரூ.20 டோக்கன்காரர்களுடன் பாஜக கூட்டணி வைக்காது – தமிழிசை சவுந்திரராஜன்

ஊழல்வாதிகளுடனும் 20 ரூபாய் டோக்கன்காரர்களுடன் பாஜக கூட்டணி வைக்காது என பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் தெரிவித்துள்ளார். கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தமிழிசை சவுந்திரராஜன், காங்கிரஸ் ஏற்கனவே தோல்வியடைந்து வரும் நிலையில், ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக அறிவித்தால் காங்கிரஸ் தோல்வியடைவது உறுதி என தெரிவித்தார்.

நாடாளுமன்ற தேர்தலுக்கு பாரதிய ஜனதா தயாராகி வருவதாகவும், அதிகாரபூர்வமாக யாருடனும் கூட்டணி குறித்து பேசவில்லை எனவும் கூறினார். டிடிவி தினகரன் பாஜகவுடன் கூட்டணி இல்லை என கூறியுள்ளதை சுட்டிக் காட்டியுள்ள தமிழிசை, ஊழல்வாதிகளுடனும் 20 ரூபாய் டோக்கன்காரர்களுடன் பாஜக கூட்டணி வைக்காது என கடுமையாக சாடினார்.

Exit mobile version