சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் தமிழக இளைஞர்கள் பதாகை ஏந்தி கஜா நிவாரணத்திற்கு ஆதரவு

கஜா புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்ட மக்களுக்கு உதவிசெய்ய சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் தமிழக இளைஞர்கள் பதாகையை ஏந்திய படி ஆதரவு தெரிவித்துள்ளனர்.

கஜா புயலால் தமிழகத்தின் தஞ்சை, நாகை, திருவாரூர், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களின் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தமிழக அரசு மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், தனியார் அமைப்புகள் நிவராண பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆயிரக்கணக்கான மக்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டு நிவாரணப் பணிகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், ஆஸ்திரேலியா – இந்தியா இடையிலான 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சிட்னியில் நடைபெற்றது. அந்த மைதானத்தில் கஜா புயலுக்கு நிவாரணம் வேண்டி “டெல்டாவை பாதுகாப்போம், தமிழ்நாடு விவசாயிகளை காப்பாற்றுவோம்”என்று எழுதப்பட்ட பதாகைகளை தமிழக இளைஞர்கள் ஏந்தியுள்ளனர். இந்த கோரிக்கையை முன் வைத்ததுடன் சர்வதேச அளவில் கவனம் ஈர்த்தனர்.

 

Exit mobile version