சர்வதேச கராத்தே போட்டியில் தங்கம் வென்ற தமிழக மாணவர்கள்

இலங்கையில் நடைபெற்ற சர்வதேச கராத்தே போட்டியில் தங்கம் வென்ற தமிழகத்தை சேர்ந்த இரண்டு மாணவர்கள் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துக்கொண்டனர்.

கடந்த 4ஆம் தேதி முதல் 7 ஆம் தேதி வரை இலங்கையில் சர்வதேச அளவிலான கராத்தே போட்டிகள் நடைபெற்றன. இதில் சென்னை அயனாவரத்தை சேர்ந்த ஆலன் ஆலிஸ்டர் மற்றும் சந்துரு ஆகிய மாணவர்கள் கலந்து கொண்டனர். இதில் ஆலன் ஆலிஸ்டர் 2 தங்க பதக்கங்களையும், சந்துரு 1 தங்கம் மற்றும் 1 வெண்கல பதக்கத்தினையும் வென்றார். சாதனை படைத்த இருவருக்கும் கல்கி அரங்கநாதர் பள்ளியில் பாராட்டு விழா நடைபெற்றது. சர்வதேச போட்டிகளில் பங்கேற்க உதவிய தமிழக அரசிற்கு மாணவர்கள் நன்றி தெரிவித்துக் கொண்டனர்

Exit mobile version