News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home TopNews

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை தற்காலிகமாக திறந்து ஆக்சிஜன் உற்பத்தி செய்ய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானம்

Web Team by Web Team
April 26, 2021
in TopNews, இந்தியா, தமிழ்நாடு
Reading Time: 1 min read
0
தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை தற்காலிகமாக திறந்து ஆக்சிஜன் உற்பத்தி செய்ய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானம்
Share on FacebookShare on Twitter

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை தற்காலிகமாக திறந்து ஆக்சிஜன் உற்பத்தி செய்ய, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா பரவல் வேகமெடுத்துள்ள நிலையில், ஆக்சிஜனுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், ஆக்சிஜன் உற்பத்திக்காக ஸ்டெர்லைட் ஆலையை திறப்பது தொடர்பான வழக்கு விசாரணையில், ஸ்டெர்லைட் ஆலையை திறந்து அரசே ஏன் நடத்தக் கூடாது என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

இதையடுத்து, ஸ்டெர்லைட் ஆலையை ஆக்சிஜன் உற்பத்திக்காக திறப்பது தொடர்பாக, தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், ஆர்.பி.உதயகுமார், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளான அதிமுக, தி.மு.க., காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், பா.ஜ.க., தேமுதிக உள்ளிட்ட கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

கூட்டத்தில், ஆக்சிஜன் உற்பத்திக்காக மட்டும் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க ஆட்சேபனை இல்லை என எதிர்க்கட்சிகள் கருத்து தெரிவித்தன.

image

ஆக்சிஜன் உற்பத்தியைத் தவிர வேறு எந்த செயல்பாட்டிற்கும் அனுமதிக்க கூடாது எனவும், ஆலையை கண்காணிக்க குழு அமைக்க வேண்டும் எனவும்  அறிவுறுத்தப்பட்டது.

தமிழகத்தில் உற்பத்தியாகும் ஆக்சிஜனை பிற மாநிலங்களுக்கு வழங்கவும் அனுமதிக்கக் கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால், ஆக்சிஜன் தேவையும் அதிகரித்துள்ளதாக கூறினார்.

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேண்டும் என்பது அரசின் நோக்கமல்ல எனவும், ஸ்டெர்லைட் ஆலையை மூடி சீல் வைத்ததே தமிழ்நாடு அரசுதான் என்றும் முதலமைச்சர் விளக்கம் அளித்தார்.

இதனைத் தொடர்ந்து, ஆக்சிஜன் உற்பத்திக்காக மட்டும் ஸ்டெர்லைட் ஆலையை 4 மாதங்களுக்கு தற்காலிகமாக திறக்க அனைத்து கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அதுவரை ஸ்டெர்லைட் ஆலைக்கு மின்சாரம் வழங்கவும், மாவட்ட ஆட்சியர் தலைமையில் குழு அமைத்து ஆக்சிஜன் உற்பத்தியை கண்காணிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலைமுன்பு பாதுகாப்புப் பணிக்காக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

 

 

Tags: newsjoxygen productionreopenSterlite plantTNGovernmentTuticorin
Previous Post

சென்னையின் மண்டல வாரியாக கொரோனா பாதிப்பு நிலவரம்

Next Post

கொரோனா தடுப்பூசியை மத்திய அரசே வழங்க வேண்டும் – முதலமைச்சர் பழனிசாமி

Related Posts

நியூஸ் ஜெ தொலைக்காட்சியின் “உரிமைக்குரல்” விவாத நிகழ்ச்சி கிராமப் புறங்களில் முதலிடம் பிடித்திருப்பது பெருமகிழ்ச்சி அளிக்கிறது! – முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி!
அரசியல்

நியூஸ் ஜெ தொலைக்காட்சியின் “உரிமைக்குரல்” விவாத நிகழ்ச்சி கிராமப் புறங்களில் முதலிடம் பிடித்திருப்பது பெருமகிழ்ச்சி அளிக்கிறது! – முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி!

January 27, 2023
rajpath road to karthavya road
இந்தியா

காலனித்துவத்தை குறிக்கும் வகையிலுள்ள ’ராஜ்பாத் சாலை’ பெயர், ’கர்த்தவ்யா சாலை’ என மாற்றம்!

September 6, 2022
’ஆங்கிலேயர் காலம் முதல் கடைபிடிக்கப்பட்டு வரும் சிறைகள் சட்டம் மாற்றப்படும்’ – மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சு!
அரசியல்

’ஆங்கிலேயர் காலம் முதல் கடைபிடிக்கப்பட்டு வரும் சிறைகள் சட்டம் மாற்றப்படும்’ – மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சு!

September 5, 2022
Dead woman lying on the floor under white cloth with focus on hand
இந்தியா

ஆண் நண்பர்களுடன் பேசியதால் 5-ஆம் வகுப்பு மாணவி கொலை! பெற்றோர் அறங்கேற்றிய கொடுஞ்செயல்!

September 5, 2022
rishi sunak liz trous
அரசியல்

இங்கிலாந்தின் பிரதமர் பதவிக்கான தேர்தல் முடிவுகள் இன்று வெளியீடு! அடுத்த பிரதமர் யார்?

September 5, 2022
edappadi k palanisamy
அரசியல்

வ.உ.சி.யின் 151-வது பிறந்தநாளையொட்டி இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி அவர்தம் படத்திற்கு மலர்தூவி மரியாதை!

September 5, 2022
Next Post
கொரோனா தடுப்பூசியை மத்திய அரசே வழங்க வேண்டும் – முதலமைச்சர் பழனிசாமி

கொரோனா தடுப்பூசியை மத்திய அரசே வழங்க வேண்டும் - முதலமைச்சர் பழனிசாமி

Discussion about this post

அண்மை செய்திகள்

ஒரே நாடு ஒரே தேர்தல் விவகாரம்!

ஒரே நாடு ஒரே தேர்தல் விவகாரம்!

February 7, 2023
இடைத்தேர்தலில் அதிமுகவின் வெற்றி உறுதியாகியுள்ளது – முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்!

இடைத்தேர்தலில் அதிமுகவின் வெற்றி உறுதியாகியுள்ளது – முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்!

February 7, 2023
உழவர் பெருந்தகை நாராயணசாமி நாயுடுவின் பிறந்தநாள்!

உழவர் பெருந்தகை நாராயணசாமி நாயுடுவின் பிறந்தநாள்!

February 7, 2023
களைகட்டிய ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் களம் – அதிமுகவிற்கு பெருகும் பொதுமக்கள் ஆதரவு!

களைகட்டிய ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் களம் – அதிமுகவிற்கு பெருகும் பொதுமக்கள் ஆதரவு!

February 7, 2023
வழக்கறிஞரின் வீட்டின் பூட்டை உடைத்து 70 சவரன் தங்க நகை கொள்ளை!

வழக்கறிஞரின் வீட்டின் பூட்டை உடைத்து 70 சவரன் தங்க நகை கொள்ளை!

February 7, 2023
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version