தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. முதல் நாளில் மறைந்த சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு அஞ்சலி செலுத்தப்படுகிறது.

தமிழக சட்டப்பேரவையில் நிதி நிலை அறிக்கை பிப்ரவரி மாதம் தாக்கல் செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து மக்களவை தேர்தல் நடைபெற்றதன் காரணமாக மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெறவில்லை. இந்த நிலையில் இன்று முதல் ஜூலை 30 ஆம் தேதி வரை சட்டசபை கூட்டதொடர் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

முதல் நாள் கூட்டத்தில் மறைந்த சட்டமன்ற உறுப்பினர்கள் சூலூர் கனகராஜ், விக்கிரவாண்டி ராதாமணி ஆகியோருக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டு கூட்டம் ஒத்திவைக்கப்படும். ஜூலை 1 ஆம் தேதி வனத்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை மானிய கோரிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளது. சட்டமன்ற கூட்டத்தொடர் ஜூலை 30 ஆம் தேதி வரை 23 நாட்கள் நடைபெற உள்ளது.

Exit mobile version