தமிழகம் முழுவதும் கல்லூரிகள் திறப்பு!
பொறியியல், கலை அறிவியல், டிப்ளமோ, ஐ.டி.ஐ. உள்ளிட்ட அனைத்து வகை கல்லூரி மாணவர்களுக்கான வகுப்புகள் தொடங்கியுள்ளன.
பொறியியல், கலை அறிவியல், டிப்ளமோ, ஐ.டி.ஐ. உள்ளிட்ட அனைத்து வகை கல்லூரி மாணவர்களுக்கான வகுப்புகள் தொடங்கியுள்ளன.
கல்லூரி மாணவர்களுக்கு வரும் ஏப்ரல் மாதம் வரை நாளொன்றுக்கு 2ஜிபி டேட்டா கார்டுகள் வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
கல்லூரி மாணவர்கள் பழைய பேருந்து அட்டையை பயன்படுத்தி கட்டணமில்லாமல் பேருந்தில் பயணிக்கலாம் என போக்குவரத்து அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
கொரோனா காலத்தில் பணியாற்றுபவர்களை கௌரவிக்கும் விதமாக, தேனியில் 400 பேர் சேர்ந்து இணையதளம் மூலம் உலக படம் வரைந்து அசத்தியுள்ளனர்.
கோவை மாவட்டம் துடியலூரில் கல்லூரி மாணவர்கள் உருவாக்கிய சிறிய வகை செயற்கை கோள்களை ஹீலியம் பலூன் மூலம் விண்ணில் ஏவி சோதனை செய்தனர்.
திருச்சியில் "மியாவாகி" முறையில் அடர்காடுகளை உருவாக்கும் திட்டத்தை மாநகராட்சி ஆணையர் சிவசுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.
நாகை மாவட்டம் கோடியக்கரை பறவைகள் சரணாலயத்தில் பறவைகளை கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது.
சென்னை பாரிமுனையில் இருந்து செங்குன்றம் நோக்கி சென்ற மாநகர பேருந்தில் பட்டாக் கத்திகள் இருந்த சம்பவம் தொடர்பாக 2 பேரை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
© 2022 Mantaro Network Private Limited.