ஏரோ இந்தியா கண்காட்சியில் பார்வையாளர்களை பிரமிப்பில் ஆழ்த்திய சூர்யகிரன் பிரிவினர்

பெங்களூருவில் நடைபெற்று வரும் ஏரோ இந்தியா கண்காட்சியில் சூர்யகிரன் பிரிவினர் பல்வேறு சாகசங்களில் ஈடுபட்டு பார்வையாளர்களை பிரமிப்பில் ஆழ்த்தினர்.

மத்திய பாதுகாப்புத் துறை சார்பில் கர்நாடகாவின் பெங்களூருவில் ஏரோ இந்தியா 2019 என்ற பெயரில் போர் விமான கண்காட்சி நடைபெற்று வருகிறது. கண்காட்சியின் 4-ம் நாளான இன்று சூர்யகிரன் பிரிவினர் சாகசத்தில் ஈடுபட்டனர். வானில் வட்டமிட்டபடி அவர்கள் சாகசத்தில் ஈடுபட்டது காண்போருக்கு பிரமிப்பை ஏற்படுத்தியது. அதைத் தொடர்ந்து இந்திய விமானப் படையைச் சேர்ந்த பெண்கள் வானில் இருந்து பாராசூட் மூலம் குதித்து ஆச்சரியத்தில் ஆழ்த்தினர். 

Exit mobile version