இரண்டு நாட்களுக்குப் பிறகு சுருளி அருவியில் குளிக்க அனுமதி சுற்றுலா பயணிகளும், ஐயப்ப பக்தர்களும் மகிழ்ச்சி

நீர்வரத்து குறைந்ததால் சுருளி அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறை அனுமதி வழங்கியுள்ளது. தேனி மாவட்டம் மேகமலை, ஹைவேலிஸ் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 22ம் தேதி பெய்த கனமழை காரணமாக சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

இதனால் பாதுகாப்பு கருதி அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க வனத்துறை தடை விதித்து இருந்தது. இந்நிலையில், நீர்வரத்து குறைந்து இருப்பதால், அருவியில் குளிக்க வனத்துறை அனுமதி அளித்துள்ளது. இதனால் சுற்றுலா பயணிகளும், ஐயப்ப பக்தர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Exit mobile version