சபரிமலையில் பதற்றமான சூழல் நிலவுவதால் ஆளில்லா விமானம் மூலம் கண்காணிப்பு பணி

சபரிமலையில் பதற்றமான சூழல் நிலவுவதால் ஆளில்லா விமானம் மூலம் கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

சபரிமலை பகுதியில் விதிக்கப்பட்ட 144 தடை உத்தரவை மீறியதற்காக இந்து ஐக்யா வேதி அமைப்பின் தலைவர் சசிகலா கேரள போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் தற்போது ரன்னி காவல் நிலையத்தில் தொடர் உண்ணாவிரத போராட்டத்தை மேற்கொண்டு வருகிறார். அவரது கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து கேரளா முழுவதும் இந்து அமைப்புகள் முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்ததால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழக எல்லையில் வாகனங்கள் நிறுத்தப்பட்டன.

இந்தநிலையில் சபரிமலை சுற்றுவட்டார பகுதிகளில் ஆயிரக்கணக்கான போலீஸார் குவிக்கப்பட்டிருப்பதுடன் ஆளில்லா விமானம் மூலம் கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Exit mobile version