BS-4 வாகனங்களை விற்பனை செய்ய தடை – உச்ச நீதிமன்றம்

BS-4 வாகனங்களை 2020ஆம் ஆண்டு ஏப்ரலுக்கு பிறகு விற்பனை செய்ய உச்ச நீதிமன்றம் அதிரடியாக தடை விதித்துள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் முதல் BS-4 வகை வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. சுகாதார மாசை கட்டுப்படுத்தும் விதமாக உச்சநீதிமன்றம் மற்றொரு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

கையிருப்பில் இருக்கும் BS-4 வகை வாகனங்களை விற்பனை செய்ய 2020ஆம் ஆண்டு ஜூன் மாதம் வரை அனுமதி அளிக்க வேண்டும் என உற்பத்தி நிறுவனங்கள் விடுத்த கோரிக்கையை நிராகரித்த உச்சநீதிமன்றம், 2020 மார்ச் 31ஆம் தேதி வரை மட்டுமே விற்பனை செய்ய முடியும் என்று உத்தரவிட்டுள்ளது.

Exit mobile version