இளம் இயக்குநரை மனம் திறந்து பாராட்டிய ரஜினிகாந்த்..

துருவங்கள் பதினாறு திரைப்படத்தின் இயக்குநரான கார்த்திக் நரேனை ரஜினிகாந்த் அவரின் இல்லத்திற்கு அழைத்து பாராட்டியுள்ளார்.

தற்போதைய தமிழ் சினிமாவில் வளர்ந்து இளம் இயக்குநர்களுக்கு முன்னணி நடிகர்கள் முக்கியத்துவம் கொடுத்துவருகின்றனர்.அதில் ’துருவங்கள் பதினாறு’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமான இயக்குநர் கார்த்திக் நரேன் முதல் படத்திலேயே அனைவரின் பாராட்டையும் பெற்றார்.பின்பு நராகசுரன் என்ற படத்தை இயக்கினார்.இந்த படம் விரைவில் திரையரங்குகளுக்கு வரவுள்ள நிலையில் அருண்விஜய், ப்ரியா பவானி சங்கர் ஆகியோரை வைத்து ‘மாஃபியா’ என்ற த்ரில்லர் படத்தை இயக்கியுள்ளார்.இந்த படத்தின் டீசரை பார்த்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த கார்த்திக் நரேனை தனது இல்லத்திற்கு அழைத்து பாராட்டியுள்ளார்.அது குறித்து கார்த்திக் நரேன் கூறுகையில், ‘சூப்பர் கண்ணா.. செம்மையா இருக்கு.இந்த வார்த்தைகள் தான் மாஃபியா டீசரை பார்த்துவிட்டு ரஜினி சார் என்னிடம் கூறியது என நெகிழ்ந்து ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Exit mobile version