காதலனுடன் தகராறு: துணை நடிகை தூக்குப்போட்டு தற்கொலை

காதலன் ஏமாற்றியதால் மனமுடைந்த துணை நடிகை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சியை சேர்ந்த துணை நடிகைக்கும் செல்போன் கடையில் வேலை பார்த்து வந்த அரவிந்த என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. கடந்த நான்கு மாதங்களாக இருவரும் திருமணம் செய்து கொள்ளாமலே சேர்ந்து வாழ்ந்துள்ளனர்.

இந்நிலையில் காதலர்களுக்கிடையே ஏற்பட்ட பிரச்சனை காரணமாக அரவிந்த் தன்னுடைய வீட்டிற்கு சென்றதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த துணை நடிகை மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

தன்னை ஏமாற்றிய அரவிந்துக்கு தக்க தண்டனை வாங்கிக் கொடுக்க வேண்டும் என்று திருப்பூரில் உள்ள தாயாருக்கு குறுஞ்செய்தி அனுப்பி விட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக பெரவள்ளூர் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

Exit mobile version