ஒருதலை காதல் விவகாரத்தில் திடீர் திருப்பம்

ஒருதலை காதல் விவகாரத்தில் ஆசிரியை ரம்யாவை வெட்டி படுகொலை செய்த ராஜசேகர், விருத்தாசலம் அருகே தற்கொலை செய்து கொண்டார்.கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடியைச் சேர்ந்த தனியார் பள்ளி ஆசிரியை ரம்யாவிடம், விருத்தகிரி குப்பம் கிராமத்தைச் சேர்ந்த ராஜசேகர் ஒருதலையாக காதலித்து தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் ராஜசேகரனிடம் தனக்கு விருப்பமில்லை என்றும், திருமணம் குறித்து, தனது வீட்டில் பேசிக்கொள்ளுமாறு ரம்யா கூறியிருக்கிறார். பின், ராஜசேகர் ரம்யாவின் வீட்டில் பெண் கேட்டும், அவரது பெற்றோர் அதற்கு மறுப்புத் தெரிவித்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த ராஜசேகர் கடந்த 22ஆம் தேதி, பள்ளி வகுப்பறையில் இருந்த ரம்யாவின், கழுத்தில் கத்தியால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியோடினர். இந்த தாக்குதலில் ரம்யா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து கொலையாளியை தேடிவந்தனர். இந்நிலையில் விருத்தாசலம் அடுத்த தொப்பையாங்குளம் கிராமத்தில் உள்ள தோட்டத்தில் கயிற்றால் தூக்கு மாட்டி கொண்டு ராஜசேகரன் தற்கொலை செய்து கொண்டார்.

Exit mobile version