மோடியுடன் விவாதிக்க ராகுலுக்கு தகுதி கிடையாது-  சுப்ரமணியசாமி பேச்சு 

பிரதமர் நரேந்திர மோடியுடன் எதிர்நின்று விவாதிக்க தகுதி இல்லாதவர், காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி என்று பாஜகவின் மூத்த தலைவர் சுப்ரமணிய சுவாமி தெரிவித்துள்ளார்.

டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ரஃபேல் விவகாரம் தொடர்பாக தம்முடன் விவாதிக்க மோடி தயாரா என்று ராகுல் காந்தி எழுப்பிய கேள்விக்கு, பிரதமர் மோடியுடன், பிரதமர் பதவி வேட்பாளராகக் கூட அவரால் போட்டியிட முடியாது என்று தெரிவித்தார்.

முதலில் பாஜகவின் பேச்சாளர் சம்பித் பத்தராவிற்கு ராகுல் பதில் சொல்லட்டும் எனவும் அவர் கூறினார். காங்கிரஸ் கட்சிக்கு என்றுமே சொந்த புத்தி கிடையாது எனவும் அவர் குற்றம் சாட்டினார். மாலத்தீவுடன் இந்தியா என்றுமே நட்புறவு பாராட்டும் எனவும் சுப்ரமணியசாமி தெரிவித்தார்.

 

Exit mobile version