கொடைக்கானல், நட்சத்திர ஏரியில் உள்ள நீரின் தன்மையை குறித்து ஆய்வு..

மதுரை மாவட்ட சுற்றுச்சூழல் ஆய்வக அறிவுறுத்தலின்படி, தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தை சேர்ந்த இளநிலை சுற்றுச்சூழல் விஞ்ஞானி லட்சுமி தலைமையிலான அதிகாரிகள், கொடைக்கானல் நட்சத்திர ஏரியில் நீரின் தன்மை குறித்து பரிசோதனை செய்தனர். அப்போது, ஏரியில் உள்ள உயிரினங்களுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் மாசு ஏற்பட்டுள்ளதா என்பது குறித்தும், பாதரச ஆலையிலிருந்து வெளியேறிய மெர்குரிகளின் மாசு கலந்துள்ளதா என்பது குறித்தும், ஆய்வு செய்ய நீர் மாதிரிகளை பாட்டில்களில் அதிகாரிகள் சேகரித்து சென்றனர்.

Exit mobile version