திருமணத்தை நிறுத்தியதால் பெண்ணின் தாயை கொடூரமாக வெட்டிக் கொலை

திருமணத்தை நிறுத்தியதால் ஆத்திரமடைந்த இளைஞர் ஒருவர், பெண்ணின் தாயை கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

சென்னை, கிண்டியைச் சேர்ந்தவர் ரேவதி. இவருடைய இரண்டு மகள்களில் ஒருவரான ஜீவிதா என்பவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த வினோத் என்பவருக்கும் ஓராண்டு முன்பு திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது. ஆனால், வினோத்தின் நடவடிக்கை சரியில்லை என்று கூறி, ஜீவிதாவின் திருமணத்தை அவரது தாயார் ரேவதி நிறுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த வினோத், நேற்று வேலை முடித்து வீடு திரும்பிய ரேவதியை, அவரது நண்பர்களுடன் சேர்ந்து அரிவாளால் சரமாரியாக தாக்கியுள்ளார். இதில், ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே ரேவதி உயிரிழந்தார். இது குறித்து, ரேவதியின் சகோதரர் கிண்டி போலீசில் புகார் கொடுத்திருந்தார். இந்த நிலையில், தலைமறைவான வினோத், வேளச்சேரி காவல் நிலையத்தில் சரணடைந்தார். தற்போது அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Exit mobile version