வீடு புகுந்து 100-க்கும் மேற்பட்ட சிலிண்டர்களைத் திருடியவர் கைது

சென்னையில் வீடு புகுந்து 100 சிலிண்டருக்குமேல் திருடிய ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை, எம்.ஜி.ஆர் நகர், கே.கே நகர், அஷோக் நகர், வளசரவாக்கம், போரூர் ஆகிய பகுதிகளில் உள்ள வீடுகளில் இருந்து சிலிண்டர்கள் தொடர்ச்சியாக திருடப்படுவதாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு வந்தது. கேபிள் ஆப்ரேட்டர் போல் வரும் நபர்கள், வீட்டில் இருப்பவர்களின் கவனத்தை திசை திருப்பி சிலிண்டர்களை திருடிக் கொண்டு தப்பி செல்வதாகவும் புகாரில் கூறப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில், எம்.ஜி.ஆர். நகர் போலீசார், தனிப்படை அமைத்து தேடி வந்தனர். சிலிண்டர் திருட்டு நடந்த பகுதிகளில் உள்ள சிசிடிவி காட்சி பதிவுகளை ஆய்வு செய்த போலீசார், இளைஞர் ஒருவர், சிலிண்டருடன் இரு சக்கர வாகனத்தில் செல்வது தெரியவந்தது. இதன் அடிப்படையில் புதுச்சேரியைச் சேர்ந்த அஷோக் குமாரை என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 20-க்கும் மேற்பட்ட சிலிண்டர்களையும், இருசக்கர வாகனத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

Exit mobile version