மாநில அளவிலான கராத்தே கருப்புப்பட்டை தேர்வு போட்டி

மணல்மேட்டில் நடைபெற்ற மாநில அளவிலான கராத்தே கருப்புப்பட்டை தேர்வு போட்டியில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு கருப்புப்பட்டை வழங்கப்பட்டது.

நாகை மாவட்டம், மயிலாடுதுறை அடுத்த மணல்மேட்டில் உள்ளகராத்தே அசோசியேஷன் சார்பில் மாநில அளவிலான கராத்தே போட்டிகள் கடந்த 6ம் தேதி துவங்கி இன்று வரை நடைபெற்றது. கராத்தேயில் கருப்புப் பட்டை பெறுவதற்காக நடைபெற்ற போட்டிகளில் நாகை, தஞ்சை, திருவாரூர், மதுரை, திருச்சி, திருநெல்வேலி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 400க்கும் மேற்பட்ட மாணவர்கள்பங்கேற்றனர். இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும், கோப்பைகளும் வழங்கப்பட்டன.

Exit mobile version