பெரியகுளத்தில் நடைபெற்ற மாநில அளவிலான மகளிர் கோ கோ விளையாட்டுப் போட்டியில், ஏராளமான மாணவிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டு திறமையை வெளிப்படுத்தினர்.
தேனி மாவட்டம், பெரியகுளம், பகுதியிலுள்ள தனியார் பள்ளியில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு மாநில அளவிலான மகளிர் கோகோ போட்டி நடைபெற்றது. 3 நாட்கள் நடைபெறும் இப்போட்டியில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 21 அணிகள் பங்கேற்றன. இதில் சுமார் 273 மாணவிகள் கலந்து கொண்டு தங்களது திறமையை வெளிப்படுத்தினர். போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. தொடர்ந்து இரத்த தான முகாமும் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Discussion about this post