தமிழகம் முழுவதும் 152 சாரண சாரணியர் மாணவர்களுக்கு மாநில ஆளுநர் விருது

தமிழகம் முழுவதும் இருந்து தேர்வு செய்யப்பட்ட 152 சாரண சாரணியர் மாணவர்களுக்கு மாநில ஆளுநர் விருதை, ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் வழங்கினார்.

சென்னை கிண்டியிலுள்ள ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கலந்து கொண்டார். மாணவர்களிடையே உரையாற்றிய ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், சுயநலமின்றி தேசத்திற்காக உழைத்தால் மட்டும் தான் மிக சிறந்த நாட்டை உருவாக்க முடியும் எனத் தெரிவித்தார். சமூகத்தில் மிகப் பெரிய மாற்றத்தை உருவாக்க, சாரண சாரணியர் இயக்கம் உறுதுணையாக இருக்கும் எனவும் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் குறிப்பிட்டார்.

 

Exit mobile version