பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டம் துவக்கம்

விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6 ஆயிரம் ரூபாய் வழங்கும் பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டத்தினை மத்திய ரயில்வே துறை அமைச்சர் பியூஸ் கோயல் சென்னையில் துவக்கி வைத்தார்.

விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6 ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தின் துவக்க விழா சென்னை வேப்பேரியிலும் நடைபெற்றது. இதில் மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் பங்கேற்று பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டத்தை துவக்கி வைத்தார்.

அப்போது பேசிய அவர், விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6 ஆயிரம் ரூபாய் நேரடியாக வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்ததாக கூறினார். இதற்காக ஆண்டிற்கு 75 ஆயிரம் கோடி ரூபாயை மத்திய அரசு ஒதுக்கி இருப்பதாக சுட்டிக் காட்டிய மத்திய அமைச்சர் பியூஸ் கோயல், விவசாயிகளை போன்று மீனவர்களுக்கும் 4 சதவீதம் வட்டியில் கடன் வழங்கப்பட உள்ளதாக தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Exit mobile version