ஸ்ரீவில்லிபுத்தூரில் புலிகள் கணக்கெடுக்கும் பணிகள் விரைவில் தொடக்கம்

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் புலிகள் கணக்கெடுக்கும் பணியின் போது, வனத்துறையினர் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்த பயிற்சி வகுப்பு நடைபெற்றது.

மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில், புலிகள் குறித்த கணக்கெடுக்கும் பணிகள் விரைவில் தொடங்கவுள்ளதாக, வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து, புலிகள் கணக்கெடுப்பு பணியின் போது, வனத்துறையினர் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த கருத்தரங்கம், வன விரிவாக்க மையத்தில் நடைபெற்றது.

இதில் கலந்து கொண்ட வனத்துறையினருக்கு, கேமராவில் பதிவான புலிகளின் காட்சிகளைக் கொண்டு விளக்கம் அளிக்கப்பட்டது. இதில், களக்காடு, முண்டந்துறை புலிகள் காப்பகத்தைச் சேர்ந்த உயிரியலாளர் ஸ்ரீதர் கலந்து கொண்டு, வனத்துறையினருக்கு பயிற்சி அளித்தார்.

Exit mobile version