கொலை செய்யப்பட்ட சிறுமியின் இல்லத்திற்கு சென்ற ஸ்டாலினுக்கு கடும் எதிர்ப்பு

கோவை அருகே கொலை செய்யப்பட்ட சிறுமியின் இல்லத்திற்கு வந்த ஸ்டாலினுக்கு, அச்சிறுமியின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

கோவை பன்னிமடை அருகே கடந்த சில நாட்களுக்கு முன்னர் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார். விவகாரத்தில் சந்தோஷ் குமார் என்பவனைக் கைதுசெய்து, காவல்துறையினர் சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின், உயிரிழந்த சிறுமியின் வீட்டிற்கு இரங்கல் தெரிவிக்க, தனது ஆதரவு பத்திரிகையாளர்களுடன் சென்றார். அப்போது சிறுமியின் தாய், தனது மகளை பற்றி தவறான தகவலை ஊடகங்களில் போட்டுவிட்டு, இங்கு ஏன் வந்தீர்கள் என்றும், தாங்கள் அரசியல் செய்ய நாங்கள் தான் கிடைத்தோமா எனவும் கேள்வி எழுப்பி, ஸ்டாலின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்தார்.

அப்போது எதுவும் கேட்காதது போல் ஸ்டாலின் புகைப்படத்திற்கு போஸ் கொடுத்துவிட்டு, அவசர அவசரமாக வெளியேறினார்.

 

Exit mobile version