கருணாநிதியை போல் ஸ்டாலினும் வாரிசு அரசியலை நடத்துகிறார்

கருணாநிதியை போல் ஸ்டாலினும் மூத்த தலைவர்களை ஓரம் கட்டிவிட்டு வாரிசு அரசியலை நடத்துவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்தார்.

தருமபுரி மாவட்டம், அரூரில் அண்ணா சிலை அருகே மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின், 71வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது, இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளதாக குறிப்பிட்ட முதலமைச்சர், இதனை எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் ஏற்றுக்கொள்ள மறுப்பதாக சாடினார். மேலும் கருணாநிதிக்கு பின் ஸ்டாலின், ஸ்டாலினுக்கு பின் அவரது மகன் உதயநிதி ஸ்டாலின் என திமுகவில் வாரிசு அரசியல் நடைபெற்று வருவதாகவும் முதலமைச்சர் விமர்சித்தார். தொண்டர்கள் விருப்பத்தின்படியே கூட்டணி வைக்கப்பட்டிருப்பதாக தெரிவித்த முதலமைச்சர், மேலும் பல கட்சிகள் கூட்டணியில் இடம்பெறவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

Exit mobile version