ஸ்டாலின் மீதான அவதூறு வழக்கு சிறப்பு அமர்வுக்கு மாற்றம்: மதுரை கிளை

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மீதான அவதூறு வழக்கை, எம்பி, எம்எல்ஏக்கள் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு அமர்வுக்கு மாற்றி உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

திண்டுக்கல்லில் கடந்த 2013ம் ஆண்டு நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில், தமிழக அரசை விமர்சித்து பேசியதாக, திண்டுக்கல் நீதிமன்றத்தில் மு.க.ஸ்டாலின் மீது அவதூறு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணைக்கு தடை கோரி ஸ்டாலின் தரப்பில் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஸ்டாலின் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இம்மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற கிளை, ஏற்கனவே ஸ்டாலின் மீதான திண்டுக்கல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த அவதூறு வழக்குக்கு இடைக்கால தடை விதித்தது.

இந்நிலையில் ஸ்டாலின் மீதான அவதூறு வழக்கை எம்பி, எம்எல்ஏக்கள் தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு அமர்வுக்கு மாற்றி நீதிபதி சுவாமிநாதன் உத்தரவிட்டார்.

Exit mobile version