மத்திய அரசு பணியில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு பணியாளர் தேர்வு ஆணையம் அறிவிப்பானை!

நாடு முழுவதும் மத்திய அரசு பணிகளில் உள்ள தொழில்நுட்பம் அல்லாத காலி பணியிடங்களையும், அவில்தார் பணியிடங்களையும் நிரப்புவதற்கான அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது. சுங்கத்துறை, மறைமுக வரிகள் துறை, போதை பொருள் தடுப்பு பிரிவு, வருவாய் மற்றும் நிதித்துறையில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பங்களை இணைய வழியில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்றும், தென் மண்டலம் சார்பில் அரசு பணியாளர் தேர்வாணையம் ஏப்ரல் 20ம் தேதி இந்த தேர்வை நடத்தவுள்ளதாகவும் கூறியுள்ளது. தமிழகத்தில் ஏழு இடங்களில் இந்த தேர்வு நடைபெற உள்ள நிலையில், பிப்ரவரி 17ஆம் தேதி விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version