தமிழக மீனவர்களை தாக்கிய இலங்கை கடற்படையினர்

கச்சத்தீவு அருகே தமிழக மீனவர்களை விரட்டியடித்து பல லட்சம் மதிப்பிலான மீன்பிடி சாதனங்களை இலங்கை கடற்படை கொள்ளையடித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் தாக்குவது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதற்கு பல்வேறு அமைப்புகள் மற்றும் கட்சிகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் நேற்று மீன்பிடிக்க சென்ற ராமேஸ்வரம் மீனவர்களை, கச்சத்தீவு அருகே இலங்கை கடற்படை அடித்து விரட்டியதாக புகார் எழுந்துள்ளது. இதனால், படகு ஒன்றுக்கு சுமார் ரூபாய் 30 ஆயிரம் முதல் 60 ஆயிரம் வரை நஷ்டம் ஏற்பட்டதாக கரை திரும்பிய மீனவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இலங்கை கடற்படையினரின் பிரச்சினைக்கு தீர்வு காண மத்திய,மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்து மீனவ அமைப்புகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Exit mobile version