இலங்கை துறைமுகத்திற்கு சென்ற இந்திய போர் கப்பலுக்கு உற்சாக வரவேற்பு

இந்திய கடற்படைக்கு சொந்தமான ஐரவான் போர்க்கப்பல் கொழும்பு துறைமுகத்தில் நிறுத்தப்படுள்ளது.

இலங்கைக்கு வந்த இந்திய கப்பலுக்கு இலங்கையின் சம்பிரதாயப்படி வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த கப்பல் வரும் 22ம் தேதி வரை இலங்கையில் நிற்கும் எனவும், இதற்கிடையில் நடைபெறும் பல்வேறு பயிற்சிகள் மற்றும் நிகழ்வுகளில் இந்தியப் படை கலந்து கொள்ளும் எனவும் இலங்கை கடற்படை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, ஐரவான் போர்க்கப்பலின் தளபதி கமாண்டர் சுனில் சங்கர் இலங்கை மேற்கு பிரிவின் தளபதி ரியர் அட்மிரல் சுமித் வீரசிங்கவை சந்தித்து கலந்துரையாடினார்.

Exit mobile version