புறம்போக்கு நிலத்தில் இருந்த பாறைகளை தகர்த்த திமுக பிரமுகர்

திருப்பூர் மாவட்டத்தின் கள்ளிமேடு கிராமத்தில் வீட்டு மனைகள் விற்பனை செய்யும் தொழிலில் ஈடுபட்டு வரும் திமுக பிரமுகர் உரிய அனுமதி பெறாமல் அரசு புறம்போக்கு நிலத்தில் இருந்த பாறைகளை வெடி வைத்து தகர்த்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் அப்பகுதியை முற்றுகையிட்டு எதிர்ப்பு தெரிவித்தனர். தகவலறிந்து விரைந்து வந்த வருவாய் துறையினர் இதுகுறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளனர்.

Exit mobile version