திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வசந்த உற்சவம் நிறைவுற்றது

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடைபெற்று வந்த வருடாந்திர வசந்த உற்சவம் சிறப்பாக நிறைவுற்றது.

கோடை காலத்தில் ஏற்படும் உஷ்ணத்தை தணிக்கும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதத்தில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வசந்த உற்சவம் நடத்தப்படும். இந்த வருட வசந்த உற்சவம் கடந்த 17 ஆம் தேதி தொடங்கியது.

ஆண்டு சித்திரை விழாவின் இறுதி நிகழ்வாக மலையப்ப சுவாமி, ஸ்ரீதேவி, பூதேவி தாயார்கள், சீதா, லட்சுமணர், ராமர், ஆஞ்சநேயர் , ருக்மணி, சத்தியபாமா, சமேத ஸ்ரீ கிருஷ்ணர் ஆகியோரை நான்கு மாட வீதியில் ஊர்வலமாகச் எடுத்த செல்லப்பட்டு பன்னீர் மற்றும் மூலிகை திரவியங்களை கொண்டு சிறப்பு திருமஞ்சனம் செய்யப்பட்டு வருடாந்திர வசந்த உற்சவம் நிறைவு செய்யப்பட்டது. இதில் ஏராளமான தேவஸ்தான நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Exit mobile version