அசுர வேகத்தில் பரவும் காய்ச்சல்…அலட்சிய போக்கு காட்டும் சுகாதாரத்துறை.!

தமிழகத்தைப் பொறுத்தவரை அனைத்து மாவட்டங்களிலும் காய்ச்சல் தீவிரமாக பரவி வருகிறது. மேலும் டைபாய்டு காய்ச்சல் தொற்றும் விரைவாக பரவுகிறது. இதனால் மக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். ஆனால் தமிழக சுகாதாரத்துறை மிகவும் அலட்சியப் போக்குடன் செயல்பட்டு வருகிறது. மக்களுக்கு போதிய மருந்துகளும், மாத்திரைகளும் அரசு மருத்துவமனைகளில் இல்லாமல் உள்ளது. இதனால் மக்கள் அனைவரும் அவதிப்பட்டு வருகிறார்கள். இன்றைய மாதத்தில் சீதோஷணநிலை மாறி வருகிறது. இதனால் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களுக்கு விரைவில் நோய்த்தாக்கும் அபாயம் உள்ளது. எனவே தமிழத்தின் சுகாதாரத்துறை மெத்தனமாக இருக்காமல் விரைந்து செயல்பட்டு மக்களின் நலனில் அக்கறை கொள்ள வேண்டும். மேலும் செய்தியினை விரிவாக தெரிந்துகொள்ள கீழுள்ள காணொளியினை சொடுக்கவும்.

Exit mobile version