அத்திவரதர் பெருவிழாவையொட்டி சென்னை பக்தர்கள் வசதிக்காக சிறப்பு ரயில்கள்

அத்திவரதர் பெருவிழாவையொட்டி, சென்னையில் இருந்து காஞ்சிபுரத்திற்கு இரண்டு சிறப்பு ரயில்கள் நாளை முதல் இயக்கப்படுகின்றன.

சென்னை பக்தர்களின் வசதிக்காக, செங்கல்பட்டு – காஞ்சிபுரம் இடையே 2 சிறப்பு மின்சார ரயில் சேவைகள் அறிமுகப்படுத்தப்படவுள்ளன. அனைத்து ரயில் நிலையங்களிலும் நின்று செல்லும், இந்த ரயில்களின் சேவை நாளை முதல் ஆகஸ்ட் 17ம் தேதி வரை அமலில் இருக்கும். செங்கல்பட்டில் இருந்து பிற்பகல் 3:10 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், மாலை 4 மணிக்கு காஞ்சிபுரத்தை சென்றடையும். காஞ்சிபுரத்தில் இருந்து நண்பகல் 12:50 மணிக்கு புறப்படும் ரயில் பிற்பகல் 2:15 மணிக்கு செங்கல்பட்டை வந்தடையும்.மற்றொரு சேவை, தாம்பரத்தில் இருந்து காலை 9 மணிக்கு சிறப்பு மின்சார ரயில் புறப்பட்டு, முற்பகல் 11 மணிக்கு காஞ்சிபுரம் சென்றடையும். காஞ்சிபுரத்தில் இருந்து மாலை 4:30 மணிக்கு புறப்படும் மின்சார ரயில் மாலை 6:30 மணிக்கு தாம்பரம் வந்தடையும்.

Exit mobile version