கோடை சீசனை முன்னிட்டு உதகையில், சிறப்பு மலை ரயில் இயக்கம்

கோடை சீசனை முன்னிட்டு உதகையில், சிறப்பு மலை ரயில் இயக்கம் துவங்கியுள்ளது.

கோடை விடுமுறையின் போது லட்சக்கணக்கிலான சுற்றுலா பயணிகள் உதகைக்கு வந்துச் செல்கின்றனர். இங்கு வரும் சுற்றுலா பயணிகள் மலை ரயிலில் பயணிக்க அதிக ஆர்வம் காட்டுகின்றனர். ஆனால், வெளிநாடுகள் மற்றும் பிற மாநில சுற்றுலா பயணிகள் முன் கூட்டியே, முன்பதிவு செய்துவிடுவதால் பலர், மலை ரயிலில் பயணிக்க முடியாதநிலை இருந்து வந்தது. கோடை சீசன் சமயங்களில் சிறப்பு ரயிலை இயக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் வலியுறுத்தி வந்தனர்.

இந்நிலையில், சுற்றுலா பயணிகள் நலன் கருதி தெற்கு ரயில்வே, சிறப்பு மலை ரயிலை இயக்க முடிவெடுத்தது. அதன்படி,நேற்று முதல் இயங்க தொடங்கிய இந்த சிறப்பு ரயில், அடுத்த மாதம் 30ஆம் தேதி வரை,சனி ஞாயிறுகளில் மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகைக்கு இயக்கப்பட உள்ளது.

Exit mobile version