ஆயுத பூஜையை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கம்

ஆயுத பூஜையை முன்னிட்டுத் தமிழகப் போக்குவரத்துத் துறை சார்பில் சென்னையில் இருந்து பல்வேறு நகரங்களுக்கு நாளை முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

ஆயுத பூஜையையொட்டித் தொடர் விடுமுறை வருவதால் மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்வதற்குச் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் எனப் போக்குவரத்து துறை அமைச்சர் அறிவித்திருந்தார். அதன்படி சென்னையில் இருந்து வழக்கமாக இயக்கப்படும் 2 ஆயிரத்து 225 பேருந்துகளுடன், நாளை முதல் ஆயிரத்து 695 சிறப்பு பேருந்துகள் கூடுதலாக இயக்கப்பட உள்ளன.

போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கத் தாம்பரம், பூவிருந்தவல்லி, மாதவரம் உள்ளிட்ட பேருந்து நிறுத்தங்களில் இருந்து வெவ்வேறு வழித்தடங்களுக்குப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

ஆந்திர மாநிலத்துக்குச் செல்லும் பேருந்துகள் மாதவரத்தில் இருந்தும், காஞ்சிபுரம், வேலூர், ஆரணி, வழியாகச் செல்லும் பேருந்துகள் பூவிருந்தவல்லியில் இருந்தும், விழுப்புரம், கடலூர், சிதம்பரம், புதுச்சேரி வழியாகச் செல்லும் பேருந்துகள் தாம்பரத்தில் இருந்து புறப்படும். மற்ற ஊர்களுக்குச் செல்லும் பேருந்துகள் கோயம்பேடு எம்.ஜி.ஆர். பேருந்து நிலையத்த்தில் இருந்து புறப்படும்.

 

Exit mobile version