தீபாவளி முடித்து சென்னை வருபவர்களுக்காக இன்று முதல் 3 நாட்கள் சிறப்பு பேருந்துகள்

தீபாவளிக்கு தங்களது சொந்த ஊர்களுக்கு சென்றவர்கள், சென்னைக்கு திரும்ப வசதியாக இன்று முதல் 3 நாட்கள் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக தமிழக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.

தீபாவளிக்காக, பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு கடந்த வெள்ளி கிழமை முதலே செல்ல துவங்கினர். இதற்காக சென்னையில் இருந்து மற்ற நகரங்களுக்கு 5 இடங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.தமிழக அரசின் இந்த நடவடிக்கை பொதுமக்களிடம் சிறப்பான வரவேற்பை பெற்றது.

இதனிடையே தீபாவளி பண்டிகை முடிந்து பொதுமக்கள் சென்னை திரும்ப வசதியாக, இன்று முதல் சனிக்கிழமை வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. இன்று புதன் கிழமை 1,388 சிறப்பு பேருந்துகளும், வியாழன் அன்று 887 பேருந்துகளும், வெள்ளியன்று 765 பேருந்துகளும், சனிக்கிழமை அன்று 1,165 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன.

இதேபோல், சென்னை திரும்பும் பொதுமக்கள், நகரின் மற்ற பகுதிகளுக்கு செல்ல வசதியாக, சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக சென்னை மாநகர போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.

 

Exit mobile version