அம்மா உணவகம் சூறையாடல் – திமுகவுக்கு எஸ்.பி.வேலுமணி கண்டனம்!

திமுக தொண்டர்களால் அம்மா உணவகம் அடித்து நொறுக்கப்பட்ட சம்பவத்துக்கு, கோவை தொண்டாமுத்தூர் தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.வேலுமணி கண்டனம் தெரிவித்துள்ளார்.

சென்னை முகப்பேர் ஜெ.ஜெ.நகர் அம்மா உணவகத்தின் முன்பாக இருந்த, மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா படத்துடன் இருந்த பதாகையை, திமுகவினர் சிலர் அடித்து உடைத்து சேதப்படுத்தினர். இதனால் அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவியது. திமுகவினரின் இந்த அராஜக செயலுக்கு அதிமுக சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.வேலுமணி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது ட்வீட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், மழை, பெருவெள்ளம், கொரோனா போன்ற பேரிடர் காலங்களில், ஏழை மக்களுக்கு பசியாற்றிய அம்மா உணவகத்தை சேதப்படுத்திய சமூக விரோதிகள் மீது உடனடியாக நடவடிக்கை வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

Exit mobile version