சௌகார்பேட் சேட்டுக்கு நாமம் போட்ட வழக்கு மேலும் ஒருவர் கைது!

சென்னை சவுகார்ப்பேட்டையில் நகை வியாபாரிகளிடம் போலீஸ் எனக்கூறி ஒரு கோடியே 40 லட்ச ரூபாய் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் மேலும் இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். கடந்த மாதம் 2ஆம் தேதி நகை வியாபாரிகள் சுப்பாராவ், ரகுமான் ஆகியோரிடம் ஒரு கோடியே 40 லட்ச ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டது. இந்த வழக்கில் ஏற்கனவே 8 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது பாஷா என்பவரும் அவரது மனைவி ஆலிஷா என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் நகை மற்றும் பணத்தை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். கைதான ஆலிஷா கைக்குழந்தையுடன் இருந்ததால் அவர் மேஜிஸ்திரேட் பிணையில் விடுவிக்கப்பட்டார். கைதான 10 பேரிடம் இருந்து இதுவரை 90 லட்சம் ரொக்கம் மீட்கப்பட்டுள்ளது.YouTube video player

Exit mobile version