பிரதமர் மோடிக்கு சியோல் அமைதி விருது வழங்குகிறது தென்கொரியா

இரண்டு நாள் அரசு முறை பயணமாக தென்கொரியா தலைநகர் சியோலுக்கு பிரதமர் மோடி சென்றுள்ளார். அங்கு நேற்று தென்கொரிய வாழ் இந்தியர்களை அவர் சந்தித்து பேசினார். தொடர்ந்து அந்நாட்டு தொழிலதிபர் மற்றும் முதலீட்டாளர்களிடமும் பேச்சுவார்த்தை நடத்தினார்.

இந்நிலையில் தென்கொரிய அதிபர் மூன் ஜே இன்னை சந்தித்து பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். இதை முன்னிட்டு, அதிபர் மாளிகைக்கு சென்ற மோடிக்கு, அரசு சார்பில் பிரமாண்டமான வரவேற்பு அளிக்கப்பட்டது.

தென்கொரிய அதிபருடன் பிரதமர் மோடி மேற்கொள்ளும் பேச்சுவார்த்தையின்போது, இருநாட்டு உறவுகள் குறித்தும், அதனை மேம்படுத்துவது குறித்தும் ஆலோசனை மேற்கொள்ளப்பட உள்ளது.

இந்நிலையில் தேசிய மற்றும் சர்வதேச அளவில் வளர்ச்சிக்கு சிறப்பாக பங்காற்றியதற்காக பிரதமர் மோடிக்கு இன்று சியோல் அமைதி விருது வழங்கப்படவுள்ளது.முன்னதாக, சியோலில் உள்ள ராணுவ வீரர்களுக்கான தேசிய நினைவகத்திற்கு சென்ற மோடி, அஞ்சலி செலுத்தினார். அப்பொழுது அங்குள்ள கையெழுத்து புத்தகத்திலும் அவர் கையெழுத்திட்டார்.

Exit mobile version